தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நிலவுகிறது-பழ. நெடுமாறன்
கோவை : தமிழகத்தில் மினி எமர்ஜென்சி சூழ்நிலை நிலவுகிறது. என்னதான் அடக்குமுறையைக் கையாண்டாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டுதான் இருப்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜபக்சே. அந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் பேசினால் தடை போடுகிறார்கள். தமிழக அரசு மினி எமர்ஜென்சி சட்டம் என போலீசாரை ஏவுகிறது.
என்னதான் சட்டம் போட்டாலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக என்றும் பேசிக் கொண்டேதான் இருப்போம். அதேபோல் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் போன்ற வகையில் எங்கள் எதிர்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கும் என்றார்.