For Quick Alerts
For Daily Alerts
Just In
இளவரசர் சார்லசை தனியாக சந்திக்க நேரமில்லை: போப்பாண்டவர் மறுப்பு
வெனிஸ்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் முதன்முறையாக வருகிற செப்டம்பர் மாதம் இங்கிலாந்திற்கு வருகிறார். ஆனால் அந்த பயணத்தின்போது இளவரசர் சார்லஸை தனியாக சந்திக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
போப் ஆண்டவராக பதவி ஏற்ற பிறகு அவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் தடவை. அங்கு அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இங்கிலாந்தில், எடின்பர்க் நகரில் உள்ள ஹோலிரூட் இல்லத்தில் தங்குகிறார். அப்போது, அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும், அவரது கணவர் பிலிப்பையும் சந்திக்கிறார்.
ராணியை சந்திக்கும் அவர், இளவரசர் சார்லசை தனியாக சந்திக்க நேரமில்லை என்று கூறி மறுத்து விட்டார். தனது 3 நாள் பயணம் மிகவும் பிசியாக உள்ளது என்று சொல்லிவிட்டாராம்.
இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, July 13, 2010, 9:18 [IST]