விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக் கோரி தென் மாவட்டங்களில் பந்த்
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் இன்று ஒரு பந்த் நடத்தினர். ஆனால் இதற்கு சுத்தமாக ஆதரவு கிடைக்காததால், அது தோல்வியடைந்தது.
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டக் கோரி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் முருகன்ஜீ தென் மாவட்டங்களில் மட்டும் இன்று பந்த் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
கமுதியில் உண்ணாவிரம் இருக்க முயன்ற முருகன்ஜீயை போலீசார் கைது செய்தனர்.
மறவபட்டியில் இருந்து உசிலம்பட்டி வந்த அரசு டவுன் பஸ்சை கருக்கட்டான்பட்டி கண்மாய் அருகில் சிலர் வழி மறித்து தாக்கினர்.
அதே போன்று, கருமாத்தூர் அருகே பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து உசிலம்பட்டி வந்த பஸ்சை அடித்து உடைத்தனர். பன்னியானில் இருந்து மதுரை செல்லும் பஸ் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர். பஸ்கள் மீது தாக்குதல் நடத்தும் கும்பல் மின்னல் வேகத்தில் மறைந்து விடுதவதால் போலீசார் அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.
பந்த் காரணமாக, தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.