தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வந்தது. பல இடங்களில் கனத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடலோரக் கர்நாடகம், தெலுங்கானா பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை வலுத்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றவுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோரப்ப குதிகளிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் எனவும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 19.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.