For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே தொடர்பாக தொடர்ந்து அலட்சியமாக செயல்படுகிறார் மமதா-லாலு, பாஸ்வான்

Google Oneindia Tamil News

Mamata Banerjee
டெல்லி: ரயில்வே துறை தொடர்பான எதிலுமே அக்கறை காட்டாமல் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுகிறார் மமதா பானர்ஜி. ஒன்று அவர் ரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டு விட்டு மேற்கு வங்கத்தோடு இருந்து கொள்ள வேண்டும். அப்பாவி மக்கள் வாழ்க்கையுடன் அவர் விளையாடக் கூடாது என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும், விரைவில் மத்திய அமைச்சர் பதவிக்கு வரவுள்ளவருமான லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

மேற்கு வங்க விபத்து குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது மாவோயிஸ்ட் தாக்குதல் எல்லாம் இல்லை. அப்படி மமதா கூறினால் அவர் மக்களை திசை திருப்புகிறார் என்றுதான் அர்த்தம். ரயில்வே துறையின் அலட்சியப் போக்கும், கவனக்குறைவுமே இந்த விபத்துக்குக் காரணம்.

முதலில் மமதா தனது செயல்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். ரயில்வே அமைச்சராக இருக்க விரும்பினால் அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கு வங்கத்தோடு இருந்து கொள்ள வேண்டும்.

இப்படி ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக அவர் நடந்து கொள்வதை ஏற்கவே முடியாது என்றார் காட்டமாக.

முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், தொடர்ந்து இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. ரயில்வே அமைச்சர் இதுகுறித்து கவனக்குறைவுடன் செயல்படுவதை ஏற்க முடியாது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதில் விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.

சிபிஎம் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாவும் மமதா பானர்ஜியை கடுமையாக கண்டித்துள்ளார். ரயில்வே துறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதற்கெல்லாம் மமதா பானர்ஜிக்கு நேரமே இல்லை. மாநில அரசியலில்தான் அவர் அதிக அக்கறை காட்டுகிறார் என்று சாடியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X