For Daily Alerts
Just In
பின்லேடனும், முல்லா ஒமரும் பாக்.கில்தான் பதுங்கியுள்ளனர்-ஹில்லாரி
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இருவரும் பாகிஸ்தானில்தான் தொடர்ந்து பதுங்கியுள்ளதாக நாங்கள் திடமாக நம்புகிறோம்.
இருவரும் பாகிஸ்தானில்தான் உள்ளனர். அவர்களைப் பிடிக்க முடிந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இவர்களுடன் அல் கொய்தாவின் துணைத் தலைவரான இமான் அல் ஜவாஹிரியும் இருக்கிறார் என்றார்.
ஆனால் பின் லேடன் இறந்து போய் விட்டதாக பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சில நேரங்களில் இதை மாற்றியும் கூறுகின்றனர். இதனால் லேடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்ந்து சர்ச்சையாகவே இருக்கிறது.
கடந்த 2001ம் ஆண்டுதான் கடைசியாக லேடன் தென்பட்டார். அதன் பின்னர் அவரது நடமாட்டமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, July 20, 2010, 11:20 [IST]