நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்
சாமியார் நித்தியானந்தாவின் படுக்கை அறையில் அவருக்கு பல்வேறு 'சேவைகளை' செய்து, தலைமறைவான ரஞ்சிதா இன்னும் எங்கிருக்கிறார் என்பது 'யாருக்குமே' தெரியவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரிலிருந்து ஒரு சிஐடி போலீஸ் குழு, சென்னைக்கு ரகசியமாக வந்து ரஞ்சிதாவை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளது. இந்த வாக்குமூலத்தை போலீஸார் கர்நாடக உயர்நீதி்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையல்ல - போலியாக சித்தரிக்கப்பட்டவை. ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நித்தியானந்தாவின் அறைக்கு நான் சென்று இருக்கிறேன் எனக் கூறியுள்ளார் ரஞ்சிதா.
இந்த வாக்குமூலத்தில் நித்தியானந்தாவையும் ரஞ்சிதா மாட்டி விடவில்லை. தானும் தவறு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேசமயம், ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் படுக்கை அறையில் அந்தரங்க காரியங்களில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் உண்மையானவையே என்று தடயவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுதான் ரஞ்சிதா ஒரு உத்தமி, சிறந்த பக்தை என்று உணர்ச்சிவசப்பட்டு நித்தியானந்தா பேட்டி அளித்த வீடியோ வெளியானது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது ரஞ்சிதா கொடுத்த வாக்குமூல விவரமும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.