அஸாருடன் காதல் இல்லை, மணக்க மாட்டேன்-ஜூவாலா மறுப்பு
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீனுக்கும் (வயது 47), பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் (வயது 26) காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும், ஹோட்டல்களில் தங்குவதாகவும் திடீரென செய்திகள் கிளம்பின.
மனைவி சங்கீதா பிஜ்லானியை அஸார் விவாகரத்து செய்யப் போவதாகவும், விரைவில் ஜூவாலாவை கைப்பிடிப்பார் எனவும் அவை கூறின. இதை உடனடியாக அஸாருதீன் மறுத்தார்.
தற்போது ஜூவாலாவும் மறுத்துள்ளார். இதுகுறித்து ஜூவாலா கூறுகையில், அஸாருதீன் எங்கள் குடும்ப நண்பர். அவருடன் வேறுவகையான எந்த தொடர்பும் இல்லை.
நான் அஸாருதீனை திருமணம் செய்ய போவதாக வந்த தகவலில் உண்மை இல்லை. எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை இருக்கிறது. இதை வைத்து இப்படி வதந்தியை பரப்பி விடுகிறார்கள்.
என்னால் அஸாருதீனும், சங்கீதா பிஜ்லானியும் பிரிய போகிறார்கள் என்று செய்திகளை பரப்பி என்னை மன வேதனை அடைய செய்கின்றனர். அஸாருதீன் குடும்ப விவகாரத்தில் நான் தலையிடவில்லை என்றார் ஜூவாலா.