திருச்சியில் ஜெ. தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்-10 நாள் முன்னதாகவே நடைபெறும்
சென்னை: திருச்சியில் ஆகஸ்ட் 24ம்தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் அதிரடியாக 10 நாள் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 14ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியில் ஆகஸ்ட் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும், அதற்கு நானே தலைமை தாங்குவேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். விலைவாசி பிரச்சினையைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் இடத் தேர்வில் தீவிரமாக உள்ளனர். ஆனால் இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் போராட்டத்தை முன்கூட்டியே நடத்துவதாக ஜெயலலிதா திடீரென அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 24ம் தேதிக்குப் பதில் 14ம் தேதியே போராட்டம் நடைபெறும் என இன்று அவர் அறிவித்துள்ளார்.