For Daily Alerts
Just In
உறவினர்களுடன் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்த அரசு ஊழியர் மாயம்
வி.கே.புரம்: பாபநாசத்தில் மாயமான அரசு ஊழியரின் கதி என்ன என்று தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து 4-வது நாளாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழநத்தம்பட்டியை சேர்ந்தவர் அமலதாசன். ராமநாதபுரம் குடிநீர் வடிகால் வாரியத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர் கடந்த 25-ம் தேதி தனது தங்கை சிறிய புஷ்பம் மற்றும் உறவினர்களுடன் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தார்.
இங்கு சொரிமுத்து அய்யனார் கோவிலில் தண்ணீர் குடிக்க சென்ற அமலநாதன் மாயமாகி விட்டார். அவருடன் சென்ற தங்கை சிறிய புஷ்பா வழி தெரியாமல் தவித்தபோது அவரை வனத்துறையினர் மீட்டனர்.
4 நாட்கள் ஆகியும அமலநாதன் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் கதி என்ன என்பது மர்மமாகவே உள்ளது. வனத்துறையினரும், வி.கே.புரம் போலீசாரும் தொடர்ந்து 4-வது நாளாக அவரை தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Friday, July 30, 2010, 12:59 [IST]