For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவும் அயோத்தி விவகாரமும் வலுவிழந்துவிட்டது: விஸ்வ ஹிந்து பரிஷத்

By Chakra
Google Oneindia Tamil News

Ashok Singhal
போபால்: ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கியதால் பாஜக வலுவிழந்து போய்விட்டது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் அசோக் சிங்கல் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் குழப்பத்தையே விளைவிக்கும். சர்ச்சைக்குரிய அயோத்தி விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றதே சரியல்ல.

உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்படலாம். நீதிமன்றத்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவே முடியாது. இதைத் தீர்க்க ஒரே வழி நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வருவது தான்.

ராமர் கோயில் பிரச்சனையை பாஜக, அரசியலாக்கியதால் அந்தக் கட்சியே வலுவிழந்துவிட்டது. இந்த விவகாரத்தால் கட்சி மட்டுமல்லாமல் ராமர் கோயில் பிரச்சனையும் சேர்ந்து வலுவிழந்துவிட்டது.

பாஜக மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்களும் இழக்கத் தொடங்கிவிட்டனர்.

பயங்கரவாத நடவடிக்கையில் ஹிந்துக்கள் ஈடுபடுவதாக நாட்டில் குற்றம் சாட்டப்படுகிறது. இது சரியல்ல என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X