For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ஜெயசீலனுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ஜெயசீலனுக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சவுதி வாழ் தமிழர்கள், ஏன் இந்தியர்கள் பலருக்கும் கூட பரிட்சயமான ஜெயசீலன் அவர்கள் கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகள் சவுதியில் பணியாற்றினார்கள். அவர் தற்போது பணி ஓய்வு பெற்று தாய் நாடு திரும்புகிறார். அவர் ஆற்றியுள்ள சமுதாய சேவை அளப்பற்கரிது.

6.8.10 மதியம் ஒரு மணியளவில் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்த ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ரியாத் கிங் பகத் ஸ்டேடியம் அருகில் உள்ள அல் ரபியா அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் அனைவரு்க்கும் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது வருகையினை இன்று மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு கைப்பேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

0505140379, 0542068867, 0552054098, 0506972461, 0503158935, 0508179159,
0553068167

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X