For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐவர் குழு தயார், திமுக அழைத்தால் பேசுவோம்-டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

Ramdoss
மதுரை: திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அழைத்தால் பேசுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2011ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் மாற்றமில்லை.

திமுகவில் இணைவது குறித்து அக்கட்சியினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசி முடிவு செய்வோம்.

காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைந்தால் அதில்இடம் பெறுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்தபோது, ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிட ஒத்துழைக்குமாறு கேட்டோம். இதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இத்தகைய காரணங்களால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X