For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் 15 சதவீதமாக உயரும்-அசோசம்

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் 15 சதவீதமாக உயரும் என அசோசம் கூறியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வே இதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருக்கும் என்று அசோசம் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் பல்வேறு விழாக்கள் வரவுள்ளன. அப்போது எரிபொருளின் தேவை அதிகரிக்கும். தற்போது விலையும் உயர்ந்துள்ளதால் அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் 15 சதவீத அளவுக்கு உயரும்.

இதே காலகட்டகத்தில் நுகர்பொருள் விலை அடிப்படையிலான பணவீக்கமும் 18 சதவீதமாக உயரும்.

பெட்ரோல், டீசல், கெரசின் விலை உயர்வு இன்னும் 2 மாதங்களில் பெருமளவில் பாதிப்பை காட்டத் தொடங்கும் என்றார் ராவத்.

கடந்த ஜூன் மாதம் பண வீக்க விகிதம் 10.16 சதவீதத்திலிருந்து 10.55 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X