கிராமத்தை தத்தெடுக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இது குறித்து துணை வேந்தர் ஆர். கற்பக குமரவேல் கூறியதாவது,
இது தொடர்பாக பல்கலைக்கழகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஏற்கனவே கலந்தாலோசித்துவிட்டது.
பல்கலைக்கழகங்கள் கிராம மக்களுக்கு உதவுவது கடமை ஆகும். அந்த நோக்கில் தான் எங்கள் பல்கலைக்கழகம் மதுரை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, ஒரு கிராமத்தை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தத்தெடுக்கப்படும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
எழுத்தறிவு, கல்வி, வளர்ச்சி நடவடிக்கைகளான சாலை, ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
இந்த பல்கலைக்கழகம் கிராம தத்தெடுப்பு நிகழச்சியை தொடர்ந்து செய்வதில் கருத்தாய் உள்ளது. மக்கள் முன்னேறிவிட்டால், பிறரால் ஏமாற்றப்படுவதும், சுரண்டப்படுவதும் படிப்படியாக குறைந்துவிடும்.
இதில் முகவர்களையும், வள்ளல்களையும், தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.