அரசு சொத்துக்களைக் கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே முன்மாதிரி ஜெ.-சென்னை மேயர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர், ஊழல், ஊதாரித்தனம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், நாட்டையே சிரழித்தவர் ஜெயலலிதா என சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதி தான் குடியிருக்கும் வீட்டையே ஏழை, எளிய மக்களின் மருத்துவ சேவைக்காக நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிற அற்புத தலைவர். அவர் வாழும் வீடு லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் நெஞ்சிக்கு புனித தலம்.

அந்த வீட்டையொட்டி பின்பகுதியில் உள்ள ஒரு சிறிய சந்து, நெடுங்காலத்துக்கு முன்னால் தூய்மை பணியாளர்கள் வந்து செல்லும் ஒரு சிறிய வழி பகுதி. அந்த இடத்தில் ஒரு சிறுபகுதியை ஆக்கிரமித்துள்ளதாக, அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே முன் உதாரணமாக திகழ்பவரும், ஊழல், ஊதாரித்தனம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், நாட்டையே சிரழித்தவருமான ஜெயலலிதா அறிக்கை விடுவது வேடிக்கை.

தூய்மை பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த இடம் இன்னமும், திறந்த நிலையிலேயே முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் ஓய்வு எடுக்கும் பகுதியாக உள்ளது.

வீட்டையே நாட்டுக்கு ஒப்படைத்த பின்னர் ஆக்கிரமிப்புக்கு என்ன அவசியம் இருக்கிறது என, விபரம் அறிந்தோர் ஜெயலலிதாவின் பொய் கூற்றை புறந்தள்ளுவர் என்பதில் அய்யம் இல்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+