For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழாவில் காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம்

Google Oneindia Tamil News

திசையன்விளை: திசையன்விளை அருகே காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை அருகே உள்ள கனரசுத்து உவரியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராமர் கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் தூதுவளை மிட்டாய் வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட அங்கிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென்று கண் சொருகி நாக்கு வெளியே தள்ளிய நிலையில் கழுத்து மேல் நோக்கிச் சென்றது. இதனால் பயந்து போன தாய்மார்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு திசையன்விளையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

மயக்கமடைந்த குழந்தைகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஓரளவு குணமடைந்த குழந்தைகள் வீ்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீ்ண்டும் சில குழந்தைகளுக்கு இழுப்பு ஏற்படவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்று திசையன்விளை அருகே உள்ள கரிசல் ஊரிலும், ஒரு வாரத்திற்கு முன்பு சொக்கலிங்கபுரத்திலும் கோவில் கொடை விழாவில் மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கத்துடன் இழுப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காலாவதியான மிட்டாய்களை சாப்பிட்டதால் இந்த இழுப்பு மயக்கம் வந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X