For Daily Alerts
Just In
வெனிசூலா விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ்
கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது.
அந்த விமானம் எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை.
போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமானது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த விமானத்தை விமான நிலையத்தின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.
விமானம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, August 17, 2010, 11:59 [IST]