For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்து சாதனை படைத்த டிசிஎஸ்

By Chakra
Google Oneindia Tamil News

TCS Logo
சென்னை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்து தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே அதிக அளவிலானோருக்கு வேலை கொடுத்த முன்னணி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம் விளங்குகிறது.

அந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 63 ஆயிரத்து 700 பணியாளர்கள் வேலை பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். உலகம் முழுவதும் ஐபிஎம் நிறுவன அலுவலகங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 4 லட்சமாகும்.

இந்தியாவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 2-வது பெரிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

2007-ம் ஆண்டுக்குப் பிறகு ஐ.டி. நிறுவனங்களில் சேரும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தப்படி உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேர் ஐ.டி. நிறுவனங்களில் சேர்கிறார்கள். அதிக சம்பளம் கிடைப்பதால் ஐ.டி. தொழில் நோக்கி செல்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

ஆளெடுப்பில் ஐபிஎம்தான் முன்னணியில் உள்ளது. தனது அலுவலக பரப்பளவையும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் 10 லட்சம் சதுர அடிக்கு அலுவலகத்தை விஸ்தரித்துள்ள ஐபிஎம், அடுத்த 3 ஆண்டுகளில், பெங்களூர், புனே, ஹைதராபாத் நகரங்களில் மேலும் 30 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு அலுவலகங்களை விஸ்தரிக்க திட்டமிட்டுள்தாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X