For Daily Alerts
Just In
ஓணம்-ஆக. 23ல் மதியம் 2 மணி வரை மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு
சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே ரயில்வே முன்பதிவு செயல்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
மலையாளிகள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வருகிற 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்திற்கே விடுமுறை விடப்படவுள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரயி்ல்வேயும் ஓணம் பண்டிகையன்று அரை நாள் மட்டுமே முன்பதிவை மேற்கொள்ளவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
திங்கட்கிழமை தெற்கு ரெயில்வேயில் உள்ள டிக்கெட் முன்பதிவு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Thursday, August 19, 2010, 12:39 [IST]