இயேசு நாதர் பெற்றோருடன் கருணாநிதி பெற்றோரை ஒப்பிட்டுப் பேச்சு-அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை: இயேசுநாதரின் பெற்றோரை, முதல்வர் கருணாநிதியின் பெற்றோருடன் ஒப்பிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ அப்பாவுவைக் கண்டித்து நாளை ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இயேசுநாதரின் தாய் தந்தையரோடு கருணாநிதியின் தாய் தந்தையரை ஒப்பிட்டு கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தியுள்ளார் ராதாபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவு .
கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்திய அப்பாவுவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இயேசு நாதரின் தாய் தந்தையரோடு கருணாநிதியின் தாய் தந்தையரை ஒப்பிட்டு கிறிஸ்துவர்களின் மனதை புண்படுத்திய ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவுவை கண்டித்தும்,
இந்தச்செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும், முதல்வர் கருணாநிதியை கண்டித்து கிறிஸ்தவர்களை புண்படுத்திய இந்த செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும், அதிமுக திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில் ராதாபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.