For Daily Alerts
Just In
எத்தனை ஆயிரம் கோடியை திமுக செலவிட்டாலும் அதிமுக வெல்வது உறுதி-வைகோ
நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக அரசு மீது எல்லா தரப்பு மக்களுக்கும் வெறுப்பு வளர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்கள் வெறுப்படைந்து போய் உள்ளனர். இதன் வெளிப்பாடாகதான் கோவை மற்றும் திருச்சி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்திய போராட்டத்தில் மக்கள் குவிந்தனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடுதான் தமிழ்நாட்டுக்குரிய நியாயத்தை கிடைக்க விடாமல் செய்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக அணி மிக வலுவாக உள்ளது. இந்த அணியில் மேலும் கட்சிகள் சேருமா? என்பது போன்ற யூகங்களுக்கு ஜெயலலிதாதான் பதிலளிக்க வேண்டும்.
ஆனால், சட்டமன்றத் தேர்தலில் திமுக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் அதிமுக அணி தான் வெற்றி பெறும் என்றார் வைகோ.
Story first published: Friday, August 20, 2010, 18:14 [IST]