For Quick Alerts
For Daily Alerts
Just In
காமன்வெல்த் விளையாட்டு-இந்தியா சார்பில் 495 பேர் பங்கேற்பு
டெல்லி: டெல்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 495 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
டெல்லியில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 829 பதக்கங்கள் வீரர், வீராங்கனைகளின் வேட்டைக்காக காத்துள்ளன.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாசார்பில் 495 வீரர், வீராங்கள் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கு தற்போது பல்வேறு மையங்களில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 176 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களையும் இந்திய அணியினர் மேற்கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடுவதற்கேற்ற பயிற்சியை அளிப்பதற்காக மத்திய அரசு ரூ. 678 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, August 26, 2010, 9:45 [IST]