For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோத்தபயாவைக் கொல்ல முயன்றதாக கூறி 3 பேர் கைது

Google Oneindia Tamil News

Gotabaya
கொழும்பு: ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சேவைக் கொல்ல முயன்றதாக கூறி 3 பேரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று கூறி போரை தீவிரமாக நடத்தியவர் கோத்தபயா. இவரது போர் தாக்குதல் உத்தரவுகளால் உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலிகளை விட அப்பாவித் தமிழர்களே அதிகம்.

இவரை சிங்களர்களுக்கும் கூட அவ்வளவாக பிடிக்காது. இவரைக்கொல்ல பலமுறை சதி நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கொலைச் சதி அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரில் ஒருவர் சிங்களர், மற்ற இருவரும் தமிழர்கள். தமிழர்களில் ஒருவருடைய பெயர் பிரபாகரன், இன்னொருவர் பெயர் செல்வமோகன்.

மூன்று பேரும் சேர்ந்து கோத்தபயாவைக் கொல்ல திட்டமிட்டு மலேசியாவிலிருந்து கொழும்பு வந்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X