For Daily Alerts
Just In
தெலுங்கானாவுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயார்! - விஜயசாந்தி
தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் தங்கி உள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக பாராளுமன்ற கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. தெலுங்கானா தனி மாநிலத்திற்காக போராட்டம் நடத்த வேண்டி இருந்ததால் அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம்.
தற்போது என் தொகுதி மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
மத்திய அரசு விரைவில் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் என்று நம்புகிறோம். தெலுங்கானாவுக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்.
மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் இனியும் காலம் தாழ்த்தாது என நம்புகிறோம்," என்றார்.
Comments
Story first published: Friday, August 27, 2010, 11:11 [IST]