For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊட்டி மலை ரயிலில் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

Ooty Train
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இன்று காலை இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை சென்று கொண்டிருந்தது.

குன்னூர் லெவல் கிராசிங் அருகே சென்றபோது ரயிலின் என்ஜினில் வெப்பம் அதிகமானதால் அது நிறுத்தப்பட்டது. இந் நிலையில் என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது.

இதைப் பார்த்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓடினர்.

தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இதையடுத்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

லெவல் கிராசிங்கில் ரயில் நின்றதால் பிற வாகனங்கள் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X