For Daily Alerts
Just In
ஷார்ஜாவில் தவிக்கும் 800 இந்தியர்கள்: வேலையின்றி பட்டினியால் வாட்டம்
நகரசபைக்கு உரிய வரியைக் கட்டாததால், தொழிலாளர் முகாம்களில் உள்ள குடிதண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
மேலும், கழிவுநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளும் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது.
ரியல் எஸ்டேட் துறை, பொருளாதார சரிவால் நலிவடைந்துள்ளது. கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்கள் பலர் நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துவிட்டனர். இவற்றால் அன்றாட உணவிற்கு போராடும் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த 800 இந்தியத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் தரப்படாமல் உள்ளதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, September 1, 2010, 11:37 [IST]