For Daily Alerts
Just In
பாக். தீவிரவாத தற்கொலைப் படைத் தாக்குதலில் 73 பேர் பலி
குவெட்டா: பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் நடந்த தீவிரவாதிளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ரம்ஜான் மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று குவெட்டாவில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேரணியில் புகுந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் பலர் அங்கேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 73 பேர் உயரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மேலும், பேரணி மீஸான் செளக் என்ற இடத்தை அடைந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த குண்டையும் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Comments
Story first published: Saturday, September 4, 2010, 17:10 [IST]