For Daily Alerts
Just In
லாவோஸுக்கு புறப்பட்டார் பிரதீபா பாட்டீல்: அங்கிருந்து கம்போடியா பயணம்
பிரதீபா முதலில் லாவோஸ் செல்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் 5 நாட்கள் அதாவது வரும் 13-ம் தேதி வரை அங்கு தங்குகிறார்.
13-ம் தேதி லாவோஸில் இருந்து புறப்படும் அவர் கம்போடியா செல்கிறார். அங்கு வரும் 18-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த இரு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே கலாச்சாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது என்று தெரிகிறது.
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சிக்கு லாவோஸ், கம்போடியா நாடுகள் ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடியா நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமும், உலகின் மிகப் பெரிய கோவிலுமான அங்கோர் வாட்டிற்கு பிரதீபா பாட்டீல் செல்கிறார்.
Story first published: Thursday, September 9, 2010, 16:40 [IST]