For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் பன்றிக் காய்ச்சல்-அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பலி
தமிழக அரசில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மோகனவேல் (39). இவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதையடுத்து அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மோகனவேல். சில நாட்களுக்கு முன்புதான் இங்கு கொண்டு வரப்பட்டார் என்றும் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
கடந்த வாரம்தான் கோவையில் 48 வயதான தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் துணைப் பொது மேலாளர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Friday, September 10, 2010, 13:51 [IST]