யுஎஸ் பங்குச் சந்தை: இந்திய நிறுவன பங்குகள் மதிப்பு 6 பில்லியன் டாலர் உயர்வு
செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,
இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 246 கோடி டாலர் உயர்ந்து 3,559 கோடி டாலராகியுள்ளது.
மகிந்திரா- சத்யம் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 49.10 கோடி டாலர் அதிகரித்து 352 கோடி டாலராகவும், விப்ரோ நிறுவனப் பங்குகளின் மதிப்பு 34.30 கோடி டாலர் உயர்ந்து 3,238 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மதிப்பு 228 கோடி டாலர் உயர்ந்து 2,540 கோடி டாலராகவும், எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு 92.40 கோடி டாலர் உயர்ந்து 2,558 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.
அதே போல டாக்டர் ரெட்டீஸ் லபாரட்டரி, ஜென்பாக்ட்,
டாட்டா மோட்டார்ஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், சிபி டெக்னாலஜிஸ், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், எம்.டி.என்.எல், இ.எக்ஸ்.எல். சர்வீசஸ் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பும் 5.70 கோடி டாலர் வரை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் பத்னி கம்ப்யூட்டர்ஸ், டபிள்யூ.என்.எஸ். ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவடைந்துள்ளது.