For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் புதிய சம்பள உயர்வு: அரசாணை வெளியீடு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களையும் வகையில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி சம்பளம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இந்த சம்பள உயர்வில் பல்வேறு துறை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக சங்கங்கள் புகார் தெரிவித்தன.

இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று பரிசீலித்தது. ஊதிய முரண் பாடுகளை களைந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் மூலம் பல்வேறு துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்ந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வகையான பத விக்கும் மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 87 வகை பதவிகளுக்கான புதிய சம்பள விகிதங்கள் பற்றிய 191 பக்கங்களில் இந்த அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய விகிதங்கள் 2006 ஜனவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டாலும் பணப் பயன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகளை தமிழக அரசின் இணைய தளமான www.tn.gov.in ல் பார்க்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X