எஸ்.ஐயை சஸ்பெண்டு செய்ய கோரி வக்கீல்கள் போராட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராஜரானும், பட்டுக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சுகுமாரனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அதிமுக பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன். இவரது மகன் ராஜராஜன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை வந்தபோது, நகரின் மையப் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகில் தனது காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் அந்த காரை எடுக்கச் சொல்ல, ஷாப்பிங் முடிந்து எடுக்கிறேன் என்று வழக்கறிஞர் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதனால் இருவரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந் நிலையில் வழக்கறிஞர் ராஜராஜனை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரனை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும், அவரை பணி இடைநீக்கம் செய்யும்வரை நீதிமன்றத்தை புறக்கணிக்கப் போவதாகவும் பட்டுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத் ராமையா தெரிவி்த்துள்ளார்.