For Quick Alerts
For Daily Alerts
Just In
சார்க் அமைப்பின் உண்மையான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை-எஸ்.எம்.கிருஷ்ணா
இதுகுறித்து அவர் கூறுகையில், சார்க் அமைப்பு உருவாகி 25 வருடங்களாகி விட்டது. ஆனால் அதன் முழுமையான இலக்கு இதுவரை அடையப்படவில்லை. குறிப்பாக வர்த்தகத் துறையில் அது சற்றும் எட்டப்படவில்லை.
கடந்த கால தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. இதுவரை நடந்துள்ளதை ஆய்வு செய்து பார்த்தால் செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளது தெரிய வரும். உண்மை நிலவரத்தின் அடிப்படையில் சார்க் அமைப்பின் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.
தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி, நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் சார்க் அமைப்பின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.
Comments
Story first published: Thursday, September 16, 2010, 17:50 [IST]