For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திட்டமிட்டபடி செப்டம்பர் 24ல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு-அலகாபாத் உயர்நீதிமன்றம்

Google Oneindia Tamil News

Ayodhya
லக்னோ: சட்டம் ஒழுங்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால், அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து தீர்ப்பு திட்டமிட்டபடி செப்டம்பர் 24ம் தேதி வெளியிடப்படுவது உறுதியாகியுள்ளது.

அயோத்தியில், ராமர்ஜென்ம பூமி, பாபர் மசூதி உள்ள இடம் யாருக்குச் சொந்தம்? கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா என்பது குறித்த சர்ச்சை பல காலமாக நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக லக்னோ பெஞ்ச்சில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பெரும் பரபரப்பான வழக்கில் செப்டம்பர் 24ம் தேதி லக்னோ பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது.

இந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதை இன்று லக்னோ பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர், இந்த மனு விசாரணைக்கு தகுதி உடையது அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் மனுவைத் தாக்கல் செய்த நபருக்கு ரூ. 10லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முழு ஆயத்த நிலையில் அரசு:

திட்டமிட்டபடி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோர்ட் கூறி விட்டதால், உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் கலவரம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சூழ்நிலையை சமாளிப்பதற்காக பெரும் ஆயத்தங்களுடன் அரசு தயாராகியுள்ளது.

கிட்டத்தட்ட 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4000 புற ராணுவப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். உ.பி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பதட்டமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீர்ப்பை அளிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்னோ பெஞ்ச் ஆகியவற்றுக்கு 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பு குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். எந்த பிரிவினரும், மற்ற பிரிவினர் மீது வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X