For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செப். 20ல் நடக்கவிருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Petrol Station
சென்னை: செப்டம்பர் 20 ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் நடக்கவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திப் போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு அளித்த உறுதிமொழி காரணமாக இந்த வேலை நிறுத்தம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விற்பனையாளர்கள் கேட்ட 5 சதவிகித கமிஷன் தொகையை வழங்குவது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இந்த கமிட்டி அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து 3 மாதங்களில் ஒரு அறிக்கை தரும் என்றும் அதன் அடிப்படையில் புதிய கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கண்ணன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X