For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

Google Oneindia Tamil News

Kashmir
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் இன்று காலையில் கல்வீச்சு சம்பவம் நடந்ததால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்க்கப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

அனந்தநாக், புலவாமா, குல்காம், சோபியான், அவந்திபுரா, ஹந்த்வாரா ஆகிய நகரங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

பத்காம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், 144 போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லைல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலிஷா கிலானி புதிதாக ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார். செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு (செப்டம்பர் 29, அக்டோபர் 1,4 ஆகிய நாட்களைத் தவிர) தினசரி போராட்டத்தை அவர் அறிவித்துள்ளார். இந்த நாட்களளில் பகல் நேரம் முழுவதும் வர்த்தகம் உள்ளிட்டவற்றை முடக்குமாறு அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X