For Daily Alerts
Just In
செப் 30-ல் விற்பனைக்கு வரும் மகிந்திரா பைக்குகள்!
டயாப்லோ, செவாலோ என்று பெரிடப்பட்டுள்ள இந்த பைக்குகளில் முதல் வகை 300 சிசி திறன் கொண்டது. இரண்டாவது வகையான சிவாலோ 125 சிசி திறன் கொண்டது.
என்பீல்டு நிறுவனத்துக்குப் பிறகு 300 சிசி பைக்கை இந்தியாவில் தயாரித்து விற்கும் நிறுவனம் மகிந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.
6 கியர்கள் கொண்ட டயாப்லோவின் விலை ரூ 1.50 லட்சம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிலோ மீட்டர் வரை தரும் என சோதனையில் நிரூபணமாகியுள்ளது. செவாலோவுக்கு ரூ 60 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர்.
இரண்டு மாடல்களுக்கும் டிஸ்க் பிரேக், செல்ப் ஸ்டார்ட்டர் வசதி உண்டு. கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளி மற்றும் சாம்பல் நிறங்களில் இந்த பைக்குகள் கிடைக்கும்.
Comments
Story first published: Sunday, September 26, 2010, 15:15 [IST]