For Daily Alerts
Just In
உயர்த்தப்பட்ட பி.எப். வட்டிக்கு வரி விதிப்பு...! - கடுப்பில் அரசு ஊழியர்கள்
டெல்லி: சமீபத்தில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்ட பிஎப் வட்டிக்கு மத்திய அரசு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தொழிலாளர்கள் செலுத்தும் வருங்கால வைப்பு நிதிக்கு மத்திய அரசு வட்டி வழங்கி வருகிறது.
சமீபத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன.
இந்த 1 சதவீத வட்டிக்கு வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் வருங்கால வைப்பு நிதி கமிட்டி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் 1 சதவீத வட்டிக்கு வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 1-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
வட்டி வீதத்தை அரசு உயர்த்தியதும் மகிழ்ந்த ஊழியர்கள் இப்போது கடுப்பில் உள்ளனர்.
Comments
Story first published: Monday, September 27, 2010, 12:13 [IST]