இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் கிழக்குப் பகுதியில் உள்ள பபுவா அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
கடலுக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அருந்தது. ஆனால், சுனாமி அலைகள் ஏற்படாததால் அந்த எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.
இந்தோனேசியாவில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.6 புள்ளிகளாகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவிலும் நிலநடுக்கம்:
இதற்கிடையே இன்று காலை மகாராஷ்டிரத்திலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.