பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிப்பு!
இதனை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
30 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க கித்துலேகொட இலங்கை தேர்தல் ஆணையாளர்களுக்கு இன்று பிற்பகல் அறிவித்தார்.
பொன்சேகாவின் இடத்தில், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜே வி பியின் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதனை ஏற்காத ஜேவிபி, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் செல்கிறது.
"சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்ட விரோத செயல்" என, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ நீதிமன்றம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் பதவி பறிப்பு போன்றவற்றில் இறஙஅகுவது ஆபத்தானது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது ஜேவிபி.