For Daily Alerts
Just In
யாஹூவை வாங்குகிறது ஏஓஎல்?
யாஹூவை மற்ற நிறுவனங்கள் வாங்க முயற்சிப்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.
இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து யாஹூவின் பங்குகள் விலை 13 சதவீதம் வரை உயர்ந்தது.
2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 47 பில்லியன் டாலருக்கு யாஹூவை வாங்க முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் இப்போது யாஹூவின் மார்க்கெட் மதிப்பு முன்பு இருந்ததை விட 25 பில்லியன் டாலர் குறைந்துவிட்டது.
போஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களின் பக்கம் இளைஞர்களின் பார்வை திரும்பி்விட்டதால் யாஹூவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் யாஹூவை வாங்க ஏஓஎல் முயற்சிக்கிறது.
இதுகுறித்து வெளிப்படையாக இப்போது எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டன இரு நிறுவனங்களும்.
Comments
Story first published: Thursday, October 14, 2010, 18:09 [IST]