For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சலப் பிரதேசத்துக்குள் அத்துமீறி ரயில்பாதை அமைக்கும் சீனா!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லை வரையில் ரயில் பாதை அமைக்கிறது சீனா.

இந்தியாவுக்கு இது மிகப்பெரிய மிரட்டல் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தை தனது ஒரு பகுதியே என பிடிவாதமாக கூறிவருகிறது சீனா. இந்தப் பகுதி சீனாவுடன் இணைந்திருப்பது போன்ற வரைபடங்களையே இப்போதும் பயன்படுத்தி வருகிறது. கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் சீனாவில் தங்கள் தயாரிப்புகள் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கில், அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் எல்லைக்குள் வருவதைப் போன்ற வரைபடங்களை தயாரித்துள்ளன.

இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தையொட்டி ரயில் பாதை அமைக்கத் தொடங்கியுள்ளது சீனா. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நியாங்ட்ரி என்ற பகுதி சீனாவுக்கு சொந்தமானது என்று கூறி சமீப காலமாக அத்துமீறி வருகிறது சீனா. ஆனால் இது முழுக்க இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். இப்போது இந்த நியாங்ட்ரி பகுதிக்கு ரயில் பாதை அமைக்கிறது சீனா. திபெத் தலைநகர் லாசாவிலிருந்து வருகிறது இந்தப் பாதை.

இதுதவிர, பிரம்மபுத்திரா நதியின் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டவிருக்கிறது சீனா. இதுவிர மேலும் 5 அணைகளையும் பிரம்மபுத்ராவின் குறுக்கே கட்டத் திட்டமிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X