அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து மகிந்திரா சத்யம பங்குகள் நீக்கம்!
நியூயார்க்: அமெரிக்க பங்கு வர்த்தக விதிமுறைகளை முழுமையாக கடைப்படிக்க முடியவில்லை என மகிந்திரா சத்யம் ஒப்புக் கொண்டதால், அந்த நிறுவனத்தின் ஏடிஆர் (American Depository Receipts) நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்காவில் ஏடிஆர்களாகத்தான் வாங்க வேண்டும்.
அக்டோபர் 15-ம் தேதிக்குள் மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் நிதிநிலை அறி்க்கையை அமெரிக்க பொது ஏற்பு கணக்கு கொள்கையின் விதிப்படி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் பங்குச் சந்தையில் நீடிக்க முடியாது என அமெரி்க்க பங்குச் சந்தை கெடு விதித்திருந்தது.
ஆனால் தங்களால் இந்த விதிமுறைகளுக்குட்பட்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்க முடியவில்லை என்று மகிந்திரா சத்யம் அறிவித்து, பங்குகளை பட்டியலிலிருந்து நீ்க்க ஒப்புக் கொண்டது.
இதன்படி சத்யம் நிறுவனத்தின் ஏடிஆர்கள் அமெரிக்கப் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.
ஓவர் தி கவுன்டர் முறையில் நேரடியாக இனி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம். சத்யம் ஏடிஆர்களை வைத்திருப்போர் இனி, அவற்றை ஓவர் தி கவுன்டர் முறையில் மாற்றிக் கொள்ளலாம். இனி மகிந்திரா நிறுவன பங்குகளின் டிக்கர் குறியீடும் மாறிவிடும்.