For Daily Alerts
Just In
பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு! - ராமதாஸ்
மதுராந்தகம் தொகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டம் பா.ம.க. சார்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
இந்தியாவில் பணக்காரர்களில் முதலிடம் அம்பானி. 234 தொகுதிகளிலும் அவர் கை காட்டும் ஆள் ஜொயிக்க முடியும். அம்பானி சொல்லும் நபர் முதல்வர் ஆக முடியும்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்குதான். தமிழகத்தில் மதுவை ஒழிப்பதுதான் அனைத்து சீரழிவுக்கும் வைக்கப்படும் முற்றுப்புள்ளி.
சமச்சீர் கல்வி கட்டணம் ஒரே கல்வி அனை வருக்கும்சம கல்வி. ஆகவே இளைஞர்கள், இளம் பெண்கள் பா.ம.க.வில் சேர்ந்தால் பா.ம.க. கட்சி நிச்சயம் வெற்றி பெறும்..." என்றார்.
Comments
Story first published: Wednesday, October 20, 2010, 13:34 [IST]