For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூதிகளில் இருக்கும் ஒலிப் பெருக்கிகளை என்ன செய்வது? சிவ சேனா கேள்வி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் நடந்த தசரா பேரணியின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஒலிபெருக்கிகள் அதிக ஒலி எழுப்பியதற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், மசுதிகளின் மேல் இருக்கும் ஒலிப்பெருக்கிகள் குறித்து ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பத்திரிக்கையான சாமனாவில் வெளியிடப்பட்டுள்ளதாவது,

பென்டி பஜார், பெஹ்ரம்பாலா ஆகிய பகுதிகளில் உள்ள மசுதிகளில் இருக்கும் ஒலிப்பெருக்கிகள் மூலம் பாங்குச் சத்தம் காதை அடைக்கிறது. இதனால் குழந்தைகளால் நிம்மதியாக படிக்கமுடியவில்லை. மேலும், மக்களின் தூக்கத்திற்கும் இடையூறாக இருக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவாஜி பூங்காவில் நடந்த தசரா பேரணியில் மும்பை நீதிமன்றம் நிரணயித்த டெசிபல் அளவை தாண்டியதற்காக தாதர் போலீசார் கட்சித் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்கள் 500 டெசிபல் அளவைத் தாண்டிவிட்டனர். எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்களுக்கு யாரும் சட்டம் சொல்லித் தரத் தேவையில்லை. எங்கள் உணர்வுகளை சட்டம் மதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாங்களும் சட்டத்தை மதிப்போம் என்று அதில் வெளிவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X