For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீஸல் மீதான விலைக் கட்டுப்பாடும் படிப்படியாக நீக்கப்படும்! - மத்திய அரசு

By Chakra
Google Oneindia Tamil News

Diesel
டெல்லி: பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது போல, டீஸல் மீதான விலைக் கட்டுப்பாடும் படிப்படியாத தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து, அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் மாற்றப்பட்டது.

இதையடுத்து பெட்ரோல் விலை உயர்ந்தது. தற்போது பெட்ரோல் விற்பனை மூலம் சென்னை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறைந்து விட்டது. ஆனால் அதே நேரத்தில் டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 87 பைசா இழப்பு ஏற்படுவதாக மீண்டும் கூற ஆரம்பித்துள்ளன.

இந்த இழப்பை குறைக்க வேண்டுமானால் டீசல் மீதான விலை கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அவ்வாறு தளர்த்தினால் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 87 பைசா அதிகரிக்கும். இது பெருமளவு பணவீக்கத்துக்கு வழிகோலும்.

ஆனாலும் அதுபற்றி கவலைப்படாத அரசு, டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஆனால் உடனடியாக இதைச் செய்யாமல், சில மாதங்கள் கழித்து அமல்படுத்தப் போவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X