For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழரிடம் சிங்களர் மன்னிப்பு கேட்க வேண்டும்! - கோமின் தயாசிறி

Google Oneindia Tamil News

Gomin Dayasri
கொழும்பு: இலங்கையில் காணப்படுகின்ற இனப் பிரச்சினைகளுக்கு, மொழிச் சிக்கலே அடிப்படை. தமிழ் மக்களிடம் சிங்கள இனத்தவர்கள் மன்னிப்புக் கோரி, சமமாக நடத்தவேண்டும்", என்று சிங்கள வழக்கறிஞர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு'வின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போது இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "இனங்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றை கலைந்து, இனரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்த இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை

இதன் காரணமாகவே இனப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் ஏனைய இனத்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

குறிப்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அதேபோல, புலிகள் சிங்கள மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். இணக்கமான சூழல் நிலவ அதுிவே உதவும்...", என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X