கொச்சியில் இன்று தென்னிந்திய அழகி இறுதிப்போட்டி: 4 தமிழக பெண்கள் பங்கேற்பு
தென்னிந்திய அழகிப் போட்டி கொச்சியில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.
யோகா, தியானம், தனிநபர் ஆளுமை மற்றும் மேம்பாடு, நடை, அழகு உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் அழகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தென்னிந்திய அழகியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்றுப் போட்டி இன்று நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி கிருபளானி, மேகா, ஸ்னேகா, ஜனனி ஆகியோர் உள்பட 16 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் இன்று நடக்கும் போட்டியின்போது பிரபல ஆடை வடிவமைப்பாளர் சாஜி மோன் வடிவமைத்த ஆடைகளை அணிவார்கள்.
நடிகையும், முன்னாள் மிஸ் இந்தியா அழகியுமான ஸ்வேதா விஜய், நடிகை அதிதி, தெலுங்கு நடிகர் கவுசல், மாடல் அழகி சைமர், மனீஸ் குல்லர் ஆகியோர் இந்தப் போட்டியின் நடுவர்களாக செயல்படுவார்கள்.
தென்னிந்திய அழகியாகத் தேர்வாகும் அழகிக்கு தங்க கிரீடமும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ. 50,000 மதிப்புடைய பரிசுகளும், மூன்றாவது இடம் பெறும் அழகிக்கு ரூ.25,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்படும்.