For Daily Alerts
Just In
சரணடைந்தார் ராமலிங்க ராஜூ!
ஹைதராபாத்: ரூ 14000 கோடி சத்யம் முறைகேடு வழக்கில் ஜாமீன் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு சரணடைந்தார்.
ஹைதராபாத் உள்ளூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை அவரும் அவரது சகோதரர் உள்ளிட்ட ஐவரும் சரணடைந்தனர்.
இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும். ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நீதிமன்றத்தில் சரணடைந்து விடுமாறு ராஜுவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை ஜனவரிக்குள் முடிய வேண்டும் என்றும் ஜூலை மாதம் இதில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, November 11, 2010, 11:40 [IST]